தனித்துப் போட்டியா? ஆதரவா?: ஓரிரு நாளில் சொல்கிறாராம் ஜான்பாண்டியன்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதா? என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
செயல்வீரர்கள் கூட்டம்
சங்கரன்கோவிலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? அல்லது ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவளிக்கலாமா? என்பது குறித்து கட்சித் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களது கருத்தை பேப்பரில் எழுதி ஜான் பாண்டியனிடம் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ஜான்பாண்டியன் தொண்டர்களிடையே பேசியதாவது:
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்து போட்டியா, இல்லையா என்ற சுமையை என்மீது வைத்திருக்கிறீர்கள். தேர்தலுக்காக அனைத்து பகுதிகளிலும கட்சி கொடிகள் முதல் சமுதாய கொடிகள் வரை அகற்றி வருகின்றனர்.
தேர்தல் விதிக்கு நாம் அனைவரும கட்டுபட வேண்டும். இதில் போட்டியிடும் 4 அரசியல்கட்சியை சேர்ந்தவர்களும் ஆதி திராவிடர்கள்தான். யார் மரியாதை கொடுத்து கூட்டணிக்கு அழைத்தாலும் ஆதரவு கொடுப்பேன் என்று கூறியிருந்தேன். இடைத்தேர்தல் தொடர்பாக நமது முடிவை ஓரிரு நாளில் அறிவிக்கிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications