தானே புயல் நிவாரணம்: தமிழகத்திற்கு கூடுதல் நிதி கிடைக்கும்- ப. சிதம்பரம்
டெல்லி: தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு கூடுதல் நிதி கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தானே புயலால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதையடுத்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நிதி அளிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது. மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ரூ.500 கோடி நிதி வழங்கியது. இந்நிலையில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை சமர்பித்துள்ளது. அந்த அறிக்கையை மத்திய அமைச்சர் குழு ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தால் தமிழகத்திற்கு நிச்சயம் கூடுதல் நிதி கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications