இடைத்தேர்தல்: பணம், பரிசைத் 'தேடி' விடிய, விடிய சுற்றும் பறக்கும் படைகள்!
சங்கரன்கோவில்: இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இடைத்தேர்தலை முன்னிட்டு சங்கரன்கோவில் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 பறக்கும் படை குழுவினர் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும், மீதமுள்ள 6 பறக்கும் படையினர் இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பறக்கும் படை அலுவலர்களை பொதுமக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் புகார்களை தெரிவிக்கலாம்.
கே.புதூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் எஸ்.சுதந்திரம் (பகல்)- 96772 13193, சங்கரன்கோவில் ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் ஆர்.செந்தில்வேல் (இரவு)- 99407 65615, செங்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் எம்.சிவசுப்பிரமணியன் (பகல்)- 98420 21368, நெல்லை சிறப்பு வட்டாட்சியர் ஏ.வரதராஜன் (இரவு)- 94423 30910,
அம்பாசமுத்திரம் சிறப்பு வட்டாட்சியர் சர்தாஜ் பேகம் (பகல்)- 94883 84098, நாங்குநேரி ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் எம்.குருச்சந்திரன் (இரவு)-94438 70226, நெல்லை சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் உமா மகேஸ்வரி (பகல்)- 99944 30701, நெல்லை முத்திரைத்தாள் சிறப்பு வட்டாட்சியர் சிவசங்கரன் (இரவு)- 94861 80825, சிவகிரி மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.ஜேம்ஸ் வெள்ளதுரை (பகல்)- 97898 20843, சிவகிரி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் வி.மாரிமுத்து (இரவு)- 94438 52083 ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம்.
இது தவிர திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தூத்துக்குடி மாவட்ட பகுதிகளுக்கு 2 பறக்கும் படைகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டி சிறப்பு துணை வட்டாட்சியர் முருகானந்தம் (பகல்)- 94423 48849, துணை வட்டாட்சியர் சேதுராமன் (இரவு)- 94862 52336 ஆகியோரை பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications