குளறுபடி வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதிக்கு கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் ஏற்பட்டதால் அவற்றை உடனடியாக மாற்றுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சங்கரன்கோவில் இடைத் தேர்தல் வரும் 18ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

மொத்தம் 242 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்யப்பட்டு சங்கரன்கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக வாக்குப் பதிவு இயந்திரங்களில் காணப்படும் சீரியல் எண்ணும், இயந்திர டிஸ்பிளேயில் தெரியும் சீரியல் எண்ணும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது சங்கரன்கோவிலில் உள்ள ஒரு சில இயந்திரங்களில் சீரியல் எண்களில் வேறுபாடு தெரிவதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து இப்பிரச்னை தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை பரிசீலனை செய்த அதிகாரிகள் உடனடியாக சீரியல் எண்களில் வேறுபாடு தெரியும் இயந்திரங்களை மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

தற்போது ராமையன்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இருந்து குளறுபடியான இயந்திரங்கள் சங்கரன்கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+