ரூ.1.65 கோடி நில மோசடி: நடராஜன் உறவினர்கள் மேலும் 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

Natarajan
திருச்சி: ரூ. 1.65 கோடி நில மோசடி வழக்கில் நடராஜனின் 3 உறவினர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி தில்லை நகரைச் சேர்ந்தவர் வரதராஜன். ரியல் எஸ்டேட் அதிபரான இவரிடம் தஞ்சையைச் சேர்ந்த புரோக்கர் சரண் என்பவர், திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் 7 ஏக்கர் இடம் விற்பனைக்கு இருப்பதாகக் கூறினார்.

இது சசிகலா கணவர் நடராஜனுக்கு சொந்தமான இடம். இந்த இடத்துக்கு ரூ.1.65 கோடி என பேசி முடித்தனர். வரதராஜன், புரோக்கர் சரண் மூலம் பணத்தை கொடுத்தார். ஆனால் பேசியபடி நிலத்தை நடராஜன் தரப்பினர் பத்திரப் பதிவு செய்யவில்லை. இதையடுத்து பணத்தைத் திரும்பத் தருமாறு வரதராஜன் கேட்டார். ஆனால், பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதுபற்றி கேட்டதற்கு தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக வரதராஜன் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நடராஜன் மற்றும் அவரது உறவினர்கள் சுரேஷ், செல்லத்துரை, சரண், குமார், அனந்தகிருஷ்ணன், சந்திரவேலன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் செல்லத்துரை, சரண், அனந்தகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+