இந்தியா உட்பட 5 தெற்காசிய நாடுகளில் அமெரிக்க சிறப்பு படைகள் டேரா
வாஷிங்டன்: பயங்கரவாத ஒழிப்புக்கான கூட்டு நடவடிக்கைக்காக இந்தியா உட்பட 5 தெற்காசிய நாடுகளில் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பசிபிக் பிராந்திய கட்டளை தளபதி அட்மிரல் ராபர் வில்லார்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தெற்காசியாவில் இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் சிறப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்படுகிறது.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஸ்கர் இ தொய்பா மிகவும் ஆபத்தான அமைப்பாகும். இந்த அமைப்பின் அச்சுறுத்தலை மிகவும் பயங்கரமானதாக கருதுகிறோம். அதனால் இந்த தெற்காசிய நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறோம்.
லஸ்கர் இ தொய்பா அமைப்பானது அல்குவைதா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து ஐரோப்பியா, ஆசியா, வட அமெரிக்க நாடுகளில் நாசவேலைகளுக்குத் திட்டமிட்டிருக்கிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications