போர்க் குற்றம்: 3 வருடமாக இலங்கை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை-அமெரிக்கா

ஐ.நா. மனித உரிமை அமைப்பில் அவர் ஆற்றிய உரை:
எங்களது கடந்த கால அனுபவங்களின் படி நல்லிணக்கம் மற்றும் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான பொறுப்பேற்பது ஆகியவை இல்லாமல் நிரந்தர சமாதானம் எங்கும் ஏற்பட முடியாது.
ஆனால், இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை காலம் கடந்துகொண்டிருக்கிறது என்று அமெரிக்கா கவலை கொள்கிறது.
போர்க்குற்றங்கள் தொடர்பான இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக சர்வதேச சமூகம் சுமார் மூன்று வருடங்கள் காத்துக்கிடந்தது. போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அமைத்த குழுவின் பரிந்துரைகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்,
நவி பிள்ளை
இக்கூட்டத்தில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பின் ஆணையர் நவி பிள்ளை ஆற்றிய உரை:
இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் போர் முடிந்தது முதல் மனித உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக நாங்கள் இலங்கையுடன் இரு தரப்புப் பேச்சுக்களை நடத்தி வருகின்றோம். அவர்களுடன் தொடர்ந்து சேர்ந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறோம். இந்த சபையில் தற்போது எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் அங்கு அமைதிக்கான விதைகளை விதப்பதாக இருக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் நியமித்த குழுவின் அறிக்கையை மனித உரிமைக் ஆணையம் விவாதத்துக்கு எடுக்கும்.
அதேபோல் இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக ஐ.நா. வல்லுநர் குழு தெரிவித்திருந்தபடி, போர்க் குற்றங்களுக்கு பொறுப்பேற்றல் உள்ளிட்ட சில விஷயங்களில் இலங்கை அரசின் விசாரணைக் குழு அற்க்கையில் குறைபாடு இருக்கிறது.
மேலும் மனித உரிமைகளுக்கு மதிப்புக்கொடுக்கும் வகையில் நாட்டு மக்களின் அச்சங்களை தீர்த்து வைக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை என்றார் அவர்..
ஆனால் அணிசேரா நாடுகளின் சார்பில் பேசிய எகிப்திய பிரதிநிதி, இலங்கை அரசின் மனித உரிமை மீறல் தொடர்பான குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அந்நாட்டுக்கு அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் தேவையற்றது என்றார்












Click it and Unblock the Notifications