புதிய குடியரசுத் தலைவர் யார்?: தடுமாறும் காங்கிரஸ்- கலாமுக்கு மீண்டும் வாய்ப்பு?

பிரதீபா பாட்டீல்
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் துணை குடியரசுத் தலைவர் அன்சாரி ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைகிறது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடித்த கையுடன் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டில் தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 16-ந்தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத் தேர்தலில் போட்டியிருக்குமானால், 19-ந்தேதி வாக்குப் பதிவு நடத்தப்படும்.
19ம் தேதி பதிவாகும் வாக்குகள் 21ம்தேதி எண்ணப்படும். குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கும்.
இந்த இரு தேர்தல்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி குரோஷியும் ஓய்வு பெறுகிறார்.
பிரதீபா பாட்டீல், கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். 2012, ஜூலை 25-ந்தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.
புதிய குடியரசுத் தலைவர்
தற்போதைய நிலைமைகளின்படி மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு யாரை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்துவது என்பதில் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்குக் காரணம் எந்தக் கூட்டணி கட்சியும் காங்கிரசை உறுதியாக ஆதரிக்காததுதான். பல்வேறு முக்கிய விவகாரங்களில் கூட்டணிக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், காஙகிரஸுடன் முறுக்கிக் கொள்கிறது.
தி.மு.கவும் அவ்வப்போது தமது எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொள்கிறது.
தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கூட ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கூட்டுக் கட்சிகளில் சில மாற்றங்களை கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
மீண்டும் கலாம்?
இந்த நிலையில் எந்த வம்புமே வேண்டாம்... பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஏற்கக் கூடிய, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் ஆதரிக்கக் கூடியவரான அப்துல் கலாமையே மீண்டும் குடியரசுத் தலைவராக்கிவிட்டால் என்ன என்ற விவாதமும் காங்கிரஸ் கட்சியில் எழத் தொடங்கியிருக்கிறது.
தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளையடுத்து களைகட்டக் காத்திருக்கிறது குடியரசுத் தலைவர் தேர்தல் என்றால் மிகையில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications