உ.பி தோல்வி, உத்தர்கண்ட் ஆட்சி குறித்து காங் தலைவர்களுடன் சோனியா ஆலோசனை

இக் கூட்டத்தில் உத்தர்கண்ட் மாநிலத்தில் ஆட்சியமைக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவைக் கோருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 70 இடங்கள் கொண்ட இந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவை. ஆனால், காங்கிரஸ் 32 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
பாஜக 31 இடங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களி்லும் சுயேச்சைகள் 3 இடங்களிலும் உத்தர்கண்ட் கிராந்தி தள் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
சுயேச்சைகள் மற்றும் உத்தர்கண்ட் கிராந்தி தள் கட்சியின் ஆதரவு கிடைத்தால் காங்கிரஸ் 36 இடங்களுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும். மாயாவதியுடன் பேச வேண்டியதில்லை. ஆனால், மாயாவதியை உள்ளே இழுத்தால், வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தர்கண்டில் அவருடன் கூட்டணிக்கும் அடி போட்டது போலவும் ஆகும். இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்.
பாஜகவை மாயாவதி ஆதரிக்க வாய்ப்பில்லை என்பதால், சுயேச்சைகள் மற்றும் கிராந்தி தள் ஆதரவோடு ஆட்சியைமைக்க பாஜக முயலலாம். ஆனால், அந்த வாய்ப்பை பாஜகவுக்குத் தந்துவிடாமல் தடுக்க சுயேச்சைகளை நேற்றே வளைக்க ஆரம்பித்துவிட்டது காங்கிரஸ். கிராந்தி தள் எம்எல்ஏவுடனும் பேசி வருகிறது.
இந் நிலையில் சோனியா தலைமையில் இன்று நடக்கும் காங்கிரஸ் உயர் மட்டக் கூட்டத்தில் உத்தர்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றனர்.
உத்தர்கண்ட் விவகாரத்தை முடித்துவிட்டு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவாவில் ஏற்பட்ட தோல்விகளுக்கான காரணங்கள் குறித்தும் இக் கூட்டம் ஆய்வு செய்தது.












Click it and Unblock the Notifications