உபி தேர்தல்: ராகுல், சோனியா தொகுதிகளில் மண்ணைக் கவ்விய காங்கிரஸ்

உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தலையில் இடியாக விழுந்துள்ளது. அதிலும் காங்கிரஸ் கோட்டை என்று கூறப்படும் அமேதி மற்றும் ரேபரேலியில் கூட அக்கட்சியால் வெற்றி பெற முடியாமல் போயுள்ளது.
அமேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமிதா சிங் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் காயத்ரி பிரசாத்திடம் 8,760 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது அக்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமேதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் சொந்த தொகுதி ஆகும்.
இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் மொத்தமுள்ள 5 இடங்களில் ஒரு இடத்தில் கூட அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. அமேதியில் மொத்தமுள்ள 5 இடங்களில் 2 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.
கடந்த 2007ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இந்த 2 தொகுதிகளில் காங்கிரஸ் 7 இடங்களில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் பிரியங்கா காந்தி தனது குழந்தைகளுடன் தங்கி பிரச்சாரம் செய்தார். அவரது கணவர் ராபர்ட் வாத்ராவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவர்கள் தவிர ராகுலும், சோனியாவும் தங்கள் பங்கிற்கு வாக்கு சேகரித்தனர். குடும்பத்துடன் பிரச்சாரம் செய்தும் கோவிந்தாவாகி விட்டது.












Click it and Unblock the Notifications