முத்தரப்பு பேச்சில் உடன்பாடு- டேங்கர் லாரி உரிமையாளர்களின் 7 நாள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

Subscribe to Oneindia Tamil

Lpg Tanker
சென்னை: 7 நாட்கள் நீடித்த சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான புதிய வாடகை ஒப்பந்தத்தை நிறைவேற்றவும், டெண்டரில் கூடுதலாக பங்கேற்ற லாரிகளுக்கு வேலை வழங்கவும் கோரி கடந்த மாதம் 29-ந் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. நேற்று 7-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.

பேச்சுவார்த்தை

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சென்னையில் கடந்த 3-ந் தேதி தமிழக அரசு அதிகாரிகள், டேங்கர் லாரி உரிமையாளர்கள், ஆயில் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. மீண்டும் நேற்றும் இப்பேச்சுவார்த்தை நடந்தது.

உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கமிஷனர் பஷீர் அகமது தலைமையிலான இப் பேச்சுவார்த்தையில், தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம், செயலாளர் கார்த்தி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் துணைப் பொதுமேலாளர்கள் தாக்கூர், பட்டாச்சாரியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மேலாளர் பிரதீப், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் துணைப் பொதுமேலாளர் ஜெயக்குமார் உள்பட 35-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நேற்று மாலை 4.30 மணியளவில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை இரவு வரை நடைபெற்றது..

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக நள்ளிரவில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+