ஏர் இந்தியா விமானிகளுக்கும் சம்பள பாக்கி... ஏப்ரல் 1 முதல் ஸ்டிரைக்!

Subscribe to Oneindia Tamil

Air India
டெல்லி: ஊதிய பாக்கித் தொகையை வழங்காவிட்டால் ஏப்ரல் 1- ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இந்திய விமானிகள் சங்கத்தின் (ஐ.பி.ஜி.) தலைவர் ஜிதேந்திர அவாத், மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஊதியமும் பிற அலவன்சுகளும் தாமதமாக வழங்கப்படுவதால் விமானிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதனால் அவர்களுக்கு பண நெருக்கடி ஏற்படுவதோடு, மறைமுகமான பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் தங்கள் பணியை திறம்பட மேற்கொள்ள இயலாது.

எனவே தங்களுக்கு வரவேண்டிய சம்பளம் மற்றும் அலவன்சு பாக்கிகளை ஏப்ரல் 1-ந் தேதிக்குள் நிர்வாகம் வழங்காவிட்டால் அன்று முதல் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவது என விமானிகள் முடிவு செய்து உள்ளனர். ஆகவே மத்திய விமானத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று அக் கடிதத்தில் ஜிதேந்திர அவாத் கூறி உள்ளார்.

இதே கோரிக்கைக்காக இந்திய வர்த்தக விமானிகள் சங்கத்தைச் சேர்ந்த விமானிகள் கடந்த ஜனவரி மாதம் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதும், இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+