சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பில் இருந்து கிங்பிஷர் சஸ்பெண்ட்

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி கடனில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்த நிறுவனத்தின் சேவைகள் கடுமையான நெருக்கடிக்குள்ளாகிறது.
இந்நிலையில், கடந்த மாதத்தில், தங்களுக்காக மற்ற விமான நிறுவனங்கள் ஆற்றிய சேவைகளுக்கான கட்டண பாக்கி தொகையை செலுத்தவில்லை. எனவே, சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பில் (ஐ.ஏ.டி.ஏ) இருந்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சஸ்பெண்ட் செய்து உள்ளது.
நிபந்தனைகளின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்டண பாக்கியை செலுத்திய பிறகு, கிங்பிஷர் நிறுவனம் மீண்டும் ஐ.ஏ.டி.ஏ. அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று, அந்த அமைப்பின் துணை இயக்குனர் ஆல்பர்ட் டிஜோங் தெரிவித்து உள்ளார்.
லேசா மூச்சுவிடுகிறது..
இந்நிலையில் சிக்கல்களுக்கும் மத்தியில் கிங்பிஷர் நிறுவனத்துக்கு எரிபொருள் வழங்க நிறுவனங்கள் இன்று முன்வந்துள்ள நிலையில் விமான சேவைகள் மீண்டும் முழுவீச்சில் தொடங்கியுள்ளது.
இந்த நிறுவனம் ஏராளமான பாக்கி வைத்திருந்ததால் அதற்கு எரிபொருள் வழங்குவதை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியிருந்தன.
எரிபொருள் வழங்கும் நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தையடுத்து அந்நிறுவனம் லேசாக மூச்சுவிடத் தொடங்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications