பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும்: பிரதீபா பாட்டீல் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

Pratibha Patil
டெல்லி: பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது,

பெண்கள் சுயசார்பை எட்டும் வகையில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கச் செய்ய வேண்டிய செயல்பாடுகள் நிறைய உள்ளன. பாலினச் சமமின்மை, ஏழ்மையை ஒழித்தல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையிலான சமூகப் பழக்கவழக்கங்களை களைதல் ஆகியவற்றில் பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குடும்பம், சமுதாயம் ஆகியவற்றைக் கட்டமைப்பதில் வியக்கத்தக்க வகையில் பணியாற்றி வரும் சாதாரணப் பெண்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுவேயாகும்.

அதே சமயம் பெண்கள் தொடர்பான அனைத்து வகை முன்னேற்றங்களிலும் குறிக்கோள்களை அடைந்ததை நினைவுபடுத்தவும், மாற்றத்துக்கு வழிகோலும் திட்டங்களை செயல்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நாட்டின் விதியை சீரமைக்க ஓய்வில்லாமல் பாடுபடும் பெண்களை நான் பாராட்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+