5 மாநில தேர்தல்: மக்கள் விரோத கொள்கையினால் காங். படுதோல்வி- சீமான்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என்று கூறி பெரிய நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவிடும் மக்கள் விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சியை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முற்றிலுமாக நிராகரித்துவி்ட்டனர். இதுவே 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணமாகும்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் தமிழக சட்டப் பேரவையில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை அடைந்தது. தற்போது மற்ற மாநிலங்களிலும் அதன் எதிர்காலம் இருண்டு போய்விட்டது. இந்த நிலையில் 2014ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் இது பிரதிபலிக்கும்.
மாநில மக்களின் உணர்வுகளை புறக்கணித்து ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி ஏற்படும் என்பது உறுதி. மாநில மக்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் எந்தக் கட்சியானாலும் இதே போன்ற முடிவையே எதிர்காலத்திலும் சந்திக்க வேண்டி இருக்கும் என்பது நிச்சயம் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications