ஜெ. வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னையைச் சேர்ந்த தம்பதி கைது

சென்னை போலீசாருக்கு நேற்றிரவு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வநத்தது. எடுத்து பேசியபோது எதிர்முனையில் இருந்த நபர் போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீடு மற்றும் அதற்கு அருகில் உள்ள வீடு ஆகியவற்றில் குண்டு வெடிக்கப் போகிறது என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
உடனே போலீசார் அந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தஞ்சாவூரில் இருந்து அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போனில் பேசிய ஜான் கென்னடி என்பவரை கைது செய்தனர்.
கென்னடி விசாரணையின்போது கூறியதாவது,
நான் எனது மனைவி அருள் உதயாவுடன் சென்னை திருவொற்றியூரில் வசித்து வருகிறேன். எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் நான் தஞ்சாவூருக்கு சென்றேன். வெடிகுண்டு வதந்தியைப் பரப்பியதில் எனது மனைவிக்கும் தொடர்பு உள்ளது என்றார்.
இதையடுத்து போலீசார் அருள் உதயாவையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications