32 அமைச்சர்களையும் கண்காணிக்க 35 குழுக்கள்: தேர்தல் ஆணையம் அதிரடி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ள மத்திய, மாநில அமைச்சர்களை கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் இந்த குழு அமைச்சர்களை பி்ன்னாடியே போய் தொடர்ந்து கண்காணிக்கும்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் 10ம் தேதிக்கு மேல் சங்கரன்கோவில் தொகுதியில் தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்கின்றனர். அதிமுக சார்பில் 32 அமைச்சர்கள் சங்கரன்கோவில் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மத்திய, மாநில அமைச்சர்களை கண்காணிக்க தனி குழு அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் செல்வராஜ் கூறியிருப்பதாவது,
சங்கரன்கோவில் தொகுதிக்கு மத்திய, மாநில அமைச்சர்கள், அனைத்து கட்சிகளின் உயர் மட்ட தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் போது அவர்களை கண்காணிக்க தனி குழுவை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட புதிய குழுக்கள் இன்று (8ம் தேதி) முதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளும் என்றார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அடுத்து 35 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தாசில்தார், ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர், ஒரு வீடியோகிராபர் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications