ஹைகோர்ட்டுக்கு வந்த திருவள்ளூர் தாசில்தார் மாயம்
சென்னை: வழக்கு விஷயமாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த திருவள்ளூர் வட்டாட்சியரைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் வட்டாட்சியராக இருப்பவர் சிவராமகிருஷ்ணன். அவர் நில வழக்கு தொடர்பாக நேற்று மாலை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது அவருடன் 2 துணை வட்டாட்சியர்களும் வந்திருந்தனர். இந்நிலையில் சிவராமகிருஷ்ணன் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்ட்டிருந்த தாங்கள் வந்த ஜீப்பில் தன்னுடயை செல்போனை வைத்துவிட்டு அவர் மட்டும் ஆவினுக்கு சென்றார்.
நீண்ட நேரமாகியும் அவர் வராததால் உடன் வந்த 2 துணை வட்டாட்சியர்களும் நீதிமன்றத்தில் இருந்து கிளம்பி வீட்டுக்கு சென்றனர். அதன் பிறகு சிவராமகிருஷ்ணனை காணவில்லை என்றும், அவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரோலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications