சங்கரன்கோவிலில் பூத் சிலிப் வினியோகம் துவங்கியது

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: இடைத்தேர்தலையொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் வாக்குச்சாவடி சீட்டுகள் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் இயந்திரத்தில் பொருத்துவதற்கான சீட்டுகள், தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

சங்கரன்கோவில் தொகுதியில் 205870 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 102815 பேர் ஆண்கள், 103055 பேர் பெண்கள். இவர்களில் 14094 பேர் புதிய வாக்காளர்கள் ஆவர்.

தேர்தலுக்காக 242 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆண், பெண் இருபாலரும் வாக்களிக்கும் சாவடிகள் 200. ஆண்களும், பெண்களும் தனித்தனியாக வாக்களிக்கும் வகையில் இருபாலருக்கும் தலா 21 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சங்கரன்கோவில் நகராட்சியில் மட்டும் மொத்தம் 38168 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 37 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டுகள் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 33 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+