தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முதன்மைப் பணி:

Subscribe to Oneindia Tamil

Akhilesh Yadav
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று அகிலேஷ் யாதவ் உறுதியளித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

தேர்தலின் போது மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். அது எமது கடமை. இதுவே எங்கள் முன் உள்ள முதல் பணியும்கூட.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் நாங்கள் செயல்படமாட்டோம். அதிகாரிகளும் அரசியல் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அதிகாரிகள் முழு கவனும் செலுத்த வேண்டும். எமது அரசாங்கம் சட்டம், ஒழுங்குக்கு முன்னுரிமை கொடுக்கும்

நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படும் அதிகாரிகளுக்கு உரிய கெளரவம் அளிக்கப்படும். பகுஜன்சமாஜ் கட்சி ஆட்சிக்காலத்தில் நினைவகங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்ட வெற்று இடங்களில் மருத்துவமனைகளும் கல்வி நிறுவனங்களும் அமைக்கப்படும்.

என்னை முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக ஆதரித்த உறவினர்களான ராம்கோபால் யாதவ் மற்றும் சிவ்பால் யாதவ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சித் தலைவரான முலாயம்சிங் யாதவ், மாநில மற்றும் தேசிய அரசியலில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுவார் .எங்களது நேதாஜியான அவரது வழியை பின்பற்றியே அவரது ஆசீர்வாதங்களுடனேயே எங்களது பணி தொடரும்.

வரும் மார்ச் 15-ந் தேதியன்று முற்பகல் 11 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+