Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் திமுகவுக்கு திராவிடர் கழகம் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்துக்கோ நடைபெறும் இடைத்தேர்தல்களின் முடிவு பெரும்பாலும் ஆளும் கட்சிகளை பதவி இறக்கம் செய்வது இல்லை. மாறாக ஆட்சியில் உள்ள கட்சிக்கு மக்களின் உணர்வுகள், வாக்காளர்கள் எப்படி தற்போது உள்ளார்கள் என்று காட்டும் அரசியல் அளக்கும் கருவியாகவே பயன்படுகின்றது.

கடந்த 10 மாதங்களாக பதவியில் உள்ள அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து உரைகல்லாக இந்த இடைத்தேர்தல் பயன்படலாம். உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றால் தெரிவிக்கப்பட்ட கண்டனங்கள், விமர்சனங்கள் போன்றவை மூலம் அதிமுகவின் ஆட்சி எப்படி நடைபெறுகின்றது என்பதற்கு சிறந்த சான்றுகளாகும்.

அரசியல் ரீதியாகவும், லட்சிய ரீதியாகவும் திராவிட இன உணர்வு அடிப்படையிலும் போட்டியிடும் முக்கிய கட்சியாக திமுக களத்தில் இறங்கியுள்ள நிலையில் திமுக வேட்பாளரை, திராவிடர் கழகம் ஆதரிக்கும்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் ஜனநாயகத்திற்கு ஒரு சோதனை என்ற போதிலும், மக்கள் உணர்வுகளைப் பெரிதும் பிரதிபலிக்க ஓரளவு பயன்படக் கூடும் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்து என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+