ஹஜ் ஒப்பந்தம்: 14ல் சவூதி அமைச்சரை சந்தித்து பேசும் இந்திய உயர்மட்டக் குழு
ஜெத்தா: 2012ம் ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்திய, சவூதி அரேபியா உயர் மட்டக் குழு கூட்டம் வரும் 14ம் தேதி ஜெத்தாவில் நடக்கிறது.
2012ம் ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்திய மற்றும் சவூதி அமைச்சர்கள் அடங்கிய உயர் மட்டக் குழு கூட்டம் வரும் 14ம் தேதி ஜெத்தாவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ. அகமது, இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் திருமதி மொஹ்சினா கித்வாய், ரியாத்துக்கான இந்திய தூதர் ஹமீத் அலி ராவ், இந்திய ஹஜ் கமிட்டியின் துணை தலைவர் அபூபக்கர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
இதில் சவூதி சார்பில் ஹஜ் அமைச்சர் டாக்டர் பந்தார் பின் முகமது பின் ஹம்ஸா அசாத் அல் ஹஜ்ஜார் தலைமையிலான அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1,70,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஷீர் பகுதியில் (மினா-அரபாத்) ஹஜ் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை அளிக்குமாறு இந்தியா கோரிக்கை விடுக்கவிருக்கிறது.
இந்திய குழு ஹஜ் பொறுப்பில் உள்ள சவூதி அதிகாரிகளையும் சந்தித்து பேசவிருக்கின்றது.












Click it and Unblock the Notifications