பிஜூ ஜனதா தளம் உருவாக்குகிறது "கூட்டாட்சி அணி"
டெல்லி: காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத கட்சிகளை ஒன்றிணைத்து புதிய அணி உதயமாகுமா? என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் "கூட்டாசி அணி" ஒன்றை பிஜூ ஜனதா தளம் உருவாக்க உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பி.மகதாப் கூறியதாவது:
நாங்கள் மூன்றாவது அணி அல்லது 4வது அணி அமைக்கப் போகிறோம் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய வகையிலான "கூட்டாட்சி அணி"யை உருவாக்கி வருகிறோம்.
கூட்டாட்சி என்பதை அனைத்து மாநிலங்களும் அனைத்து மாநிலத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். கூட்டாட்சி தத்துவத்தை ஆதரிக்கும் எந்த ஒரு கட்சியும் இந்த அணியில் இணைந்து கொள்ளலாம்.
மத்திய அரசால் மாநிலங்களின் பல உரிமைகள் கபளீகரம் செய்யப்பட்டுவிட்ட நிலையே தற்போது உள்ளது. மத்திய அரசு கவிழ்ந்த பிறகுதான் அடுத்த தேர்தலைப் பற்றி நாங்கள் பேச முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications