ஈழத் தமிழர்கள் குறித்து குடியரசுத் தலைவர் குறிப்பிடவில்லையே-திமுக கண்டனம்

இது குறித்து நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டிஆர் பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் தமிழர்களின் அவலநிலை பற்றியோ, ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றியோ ஜனாதிபதி உரையில் எதுவும் கூறப்படவில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்.
தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணிக்கலாம் என்ற யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது. தீர்மானத்தை ஆதரித்தல் என்ற நிலைப்பாட்டுக்கு குறைவான எதையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்றார்.
நேற்று குடியரசுத் தலைவர் உரையாற்றுவதற்கு முன்பு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது நினைவிருக்கலாம். இருப்பினும் தமிழகத்தைச் சேர்ந்த பிற கட்சி எம்.பிக்கள் வாய் மூடி அமைதியாக இருந்தனர்.












Click it and Unblock the Notifications