தாக்கலானது ரயில்வே பட்ஜெட்!

நாட்டின் முதல் புல்லட் ரயில் குறித்த அறிவிப்பு, உயர் வகுப்பு பயணிகள் கட்டண உயர்வு, பாதுகாப்பு வரி உள்ளிட்ட பல புதிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இருப்பினும் 2ம் வகுப்பு சாதாரண பயணிகள் கட்டணம் உயராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு வரி
இன்றைய பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பாக பாதுகாப்பு வரி என்ற புதிய வரிதான் இருக்கும் என்று தெரிகிறது. அதாவது கட்டணத்தை உயர்த்தாமல், பயணிகளிடமிருந்து பாதுகாப்பு வரி என்ற பெயரில் பெருமளவிலான பணத்தை வசூலிக்கும் மறைமுக திட்டமாகும் இது. இதன் மூலம் நஷ்டத்தைக் குறைப்பது போலவும் ஆகும், அதேசமயம், கட்டணத்தை உயர்த்தியது போலும் ஆகும்.
இந்த பாதுகாப்பு வரி மூலம் ஆண்டுக்கு ரூ. 5000 கோடி வரை வசூலிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஏசி வகுப்பு மற்றும் முதல் வகுப்புப் பயணிகளுக்கு மட்டும் இந்த பாதுகாப்பு வரி வசூலிக்கப்படலாம் என்று தெரிகிறது.
புது ரயில் இருக்காது
இந்த ஆண்டு புதிய ரயில்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பதில் இருக்கிற ரயில்களில் தரத்தை உயர்த்துவது, அடிப்படைக் கட்டமைப்பை மேம்பபடுத்துவது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் தரும் திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.
திரினமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் திணேஷ் திரிவேதி. மமதா ரயில்வே அமைச்சராக இருந்தபோது தனது மாநிலத்திற்குத்தான் கூடுதல் கவனம் செலுத்தினார். அதேபோல தற்போதும் மமதாவின் முத்திரையே திணேஷின் பட்ஜெட்டிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் புல்லட் ரயில்
நாட்டின் முதலாவது புல்லட் ரயில் குறித்த அறிவிப்பு இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தெரிகிறது. மும்பைக்கும்-அகமதாபாத்துக்கும் இடையே இந்த புல்லட் ரயில் இயக்கப்படும்.
மும்பை- அகமதாபாத் இடையே மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் முதலில் இந்த புல்லட் ரயில் இயக்கபடும். மிக அதிகபட்சமாக ஒரு மணிநேரத்துக்கு 350 கிலோ மீட்டர் வேகத்துக்கு இந்த ரயில் இயக்கப்படும். ரூ 60 ஆயிரம் கோடி மதிப்பிலான இத்திட்டத்தை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் 10 ஆண்டுகளில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அகமதாபாத்- மும்பை இடையேயான தற்போதைய தூரந்தோ ரயிலில் 7 மணி நேர பயணம் எனில் புல்லட் ரயிலில் 4 மணிநேரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண மனிதர்களுக்கான சிறந்த பட்ஜெட்-தினேஷ் திரிவேதி:
முன்னதாக இந் நிலையில் ரயில்வே பட்ஜெட் நிச்சயமாக நல்ல பட்ஜெட்டாக இருக்கும் என்றும் சாதாரண எளிய குடிமகனுக்கு சிறந்த பட்ஜெட்டாக இருக்கும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியுள்ளார்.
இந்திய ரயில்வேயை தங்கம் போல ஜொலிக்க வைக்கும் வகையில் இந்த ரயில்வே பட்ஜெட் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications