Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாக்கலானது ரயில்வே பட்ஜெட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய ரயில்வே பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திணேஷ் திரிவேதி தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

நாட்டின் முதல் புல்லட் ரயில் குறித்த அறிவிப்பு, உயர் வகுப்பு பயணிகள் கட்டண உயர்வு, பாதுகாப்பு வரி உள்ளிட்ட பல புதிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இருப்பினும் 2ம் வகுப்பு சாதாரண பயணிகள் கட்டணம் உயராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு வரி

இன்றைய பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பாக பாதுகாப்பு வரி என்ற புதிய வரிதான் இருக்கும் என்று தெரிகிறது. அதாவது கட்டணத்தை உயர்த்தாமல், பயணிகளிடமிருந்து பாதுகாப்பு வரி என்ற பெயரில் பெருமளவிலான பணத்தை வசூலிக்கும் மறைமுக திட்டமாகும் இது. இதன் மூலம் நஷ்டத்தைக் குறைப்பது போலவும் ஆகும், அதேசமயம், கட்டணத்தை உயர்த்தியது போலும் ஆகும்.

இந்த பாதுகாப்பு வரி மூலம் ஆண்டுக்கு ரூ. 5000 கோடி வரை வசூலிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஏசி வகுப்பு மற்றும் முதல் வகுப்புப் பயணிகளுக்கு மட்டும் இந்த பாதுகாப்பு வரி வசூலிக்கப்படலாம் என்று தெரிகிறது.

புது ரயில் இருக்காது

இந்த ஆண்டு புதிய ரயில்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பதில் இருக்கிற ரயில்களில் தரத்தை உயர்த்துவது, அடிப்படைக் கட்டமைப்பை மேம்பபடுத்துவது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் தரும் திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.

திரினமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் திணேஷ் திரிவேதி. மமதா ரயில்வே அமைச்சராக இருந்தபோது தனது மாநிலத்திற்குத்தான் கூடுதல் கவனம் செலுத்தினார். அதேபோல தற்போதும் மமதாவின் முத்திரையே திணேஷின் பட்ஜெட்டிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் புல்லட் ரயில்

நாட்டின் முதலாவது புல்லட் ரயில் குறித்த அறிவிப்பு இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தெரிகிறது. மும்பைக்கும்-அகமதாபாத்துக்கும் இடையே இந்த புல்லட் ரயில் இயக்கப்படும்.

மும்பை- அகமதாபாத் இடையே மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் முதலில் இந்த புல்லட் ரயில் இயக்கபடும். மிக அதிகபட்சமாக ஒரு மணிநேரத்துக்கு 350 கிலோ மீட்டர் வேகத்துக்கு இந்த ரயில் இயக்கப்படும். ரூ 60 ஆயிரம் கோடி மதிப்பிலான இத்திட்டத்தை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் 10 ஆண்டுகளில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அகமதாபாத்- மும்பை இடையேயான தற்போதைய தூரந்தோ ரயிலில் 7 மணி நேர பயணம் எனில் புல்லட் ரயிலில் 4 மணிநேரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண மனிதர்களுக்கான சிறந்த பட்ஜெட்-தினேஷ் திரிவேதி:

முன்னதாக இந் நிலையில் ரயில்வே பட்ஜெட் நிச்சயமாக நல்ல பட்ஜெட்டாக இருக்கும் என்றும் சாதாரண எளிய குடிமகனுக்கு சிறந்த பட்ஜெட்டாக இருக்கும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியுள்ளார்.

இந்திய ரயில்வேயை தங்கம் போல ஜொலிக்க வைக்கும் வகையில் இந்த ரயில்வே பட்ஜெட் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+