இந்த இடைத்தேர்தல் தேமுதிகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே நடக்கும் போட்டியல்ல: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேமுதிகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே நடக்கும் போட்டியன்று. மாறாக தமிழகத்தை இருளில் மூழ்கடித்த அரசுக்கும், மக்களுக்கும் இடையே நடக்கும் போர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக வேட்பாளர் முத்துகுமாரை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சின்னகோவிலான்குளம், சூரங்குடி, நடுவங்குறிச்சி, வென்றிலிங்கபுரம், குலசேகரமங்கலம், தர்மத்தூரணி, பாண்டியாபுரம், வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

தற்போது அதிமுக ஆட்சியில் பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். தற்போதைய மின்தடைக்கு காரணம் திமுக அரசு தான் என அதிமுகவினர் பேசி வருகின்றனர். ஆனால் அது தவறு கடந்த இருமுறை ஆட்சி செய்த அதிமுக வருங்காலத்தை நினைத்து மின்பாற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க எந்த திட்டமாவது தீட்டியதா? தற்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலை கணக்கி்ல் கொண்டு உடன்குடி அனல்மின் நிலைய திட்டம் ரூ.8,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது வெறும் கண்துடைப்பே ஆகும்.

இதுவரை சங்கரன்கோவில் தொகுதிக்கு வராத அமைச்சர்கள் தற்போது வந்துள்ளனர். தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் யாரையாவது நீங்கள் சந்திக்க முடியுமா? இந்த தேர்தல் எனக்கும், அதிமுகவுக்கும் இடையே நடக்கும் போட்டியல்ல. இருளில் உங்களை மூழ்கடித்த அதிமுக அரசுக்கும், மக்களுக்கும் நடக்கும் போர் ஆகும். எனவே தேமுதிக வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளை செலுத்தி வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+