முன்விரோதம்: தூத்துக்குடியில் வீட்டுக்கு முன் நின்ற மூத்த வழக்கறிஞர் காருக்கு தீவைப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆதித்தனின் வீட்டுக்கு முன்பு நின்று கொண்டிருந்த அவரது கார் மீது பெட்ரோல் ஊற்றி 2 இளைஞர்கள் தீ வைத்தனர்.
தூத்துக்குடி மாசிலாமணிபுரம் 3ம் தெருவில் வசித்து வருபவர் மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணிய ஆதித்தன்(68). அவர் வழக்கறிஞர் சங்க முன்னாள் செயலாளராகவும், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.
நேற்றிரவு 8 மணியளவில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் ஆதித்தன் வீட்டு கேட்டைத் திறந்து அங்கு நின்று கொண்டிருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதைப் பார்த்த வழக்கறிஞரின் மனைவி புஷ்பா சத்தம்போட்டவுடன் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். உடனே கணவனும், மனைவியுமாகச் சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் இன்ஸ்பெக்டர் குருநாதன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சொத்து தொடர்பாக உள்ள முன்விரோதத்தினால் புஷ்பாவின் தங்கை கணவர் ஆறுமுகநேரியைச் சேர்ந்த பாண்டியனின் தூண்டுதலில் தான் காருக்கு தீ வைக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications