இடைத்தேர்தல் பற்றி கருத்துக்கணிப்பு வெளியிடத் தடை: பிரவீண் குமார் உத்தரவு

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
சங்கரன்கோவில் சட்டசபை (தனி) தொகுதி இடைத் தேர்தல் வரும் 18ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தல் தொடர்பாக ஊடகங்கள், பத்திரிகைகள் கருத்து கணிப்போ, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்போ, தேர்தல் தொடர்பான எவ்விதமான ஆய்வு அறிக்கைகளோ வெளியிடுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலையட்டி 16ம் தேதி மாலை 5 மணி முதல் 48 மணி நேரத்திற்கு ஊடகங்கள் கருத்து கணிப்போ அல்லது தேர்தல் தொடர்பான எந்தவிதமான ஆய்வு அறிக்கையோ வெளியிடக்கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதுபோல தேர்தல் நடைபெறும் 18ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடக் கூடாது என்றும் ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications