தலைமைச் செயலகத்தையே சங்கரன்கோவிலுக்கு மாற்றிவிட்டார் ஜெயலலிதா: முக ஸ்டாலின்

பிரச்சாரத்திற்காக சங்கரன்கோவில் வந்துள்ள திமுக பொருளாளர் முக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த கையோடு புதிய தலைமைச் செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார். தற்போது தனது அமைச்சரவையில் உள்ள 32 அமைச்சர்களையும் சங்கரன்கோவிலுக்கு அனுப்பி தலைமைச் செயலகத்தை அங்கு மாற்றியுள்ளார். இந்த இடைத்தேர்தல் முடிவு மூலம் ஜெயலலிதாவின் அராஜக ஆட்சியை முறியடித்து மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். கலிங்கப்பட்டி உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்வேன் என்றார்.
திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து மக்கள் ஏமாந்து போனது தான் மிச்சம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, அதற்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. அவரது கட்சி பெயரிலேயே திராவிடம் உள்ளது என்றார்.
நீங்களும், உங்கள் அண்ணன் அழகிரியும் சேர்ந்து இடைத்தேர்தல் பணியாற்றுவீர்களா? என்று கேட்டதற்கு, சேர்ந்து தானே இருக்கிறோம். தனித்தனியாகவா இருக்கிறோம் என்று பதில் கேள்வி கேட்டார்.












Click it and Unblock the Notifications