இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்காத பிரணாப் முகர்ஜியின் பேச்சுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்
சென்னை: இலங்கைக்கு எதிரான ஐ.நா.மனித உரிமைக் குழுவின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல், அதற்கு விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பேச்சுக்கு, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஐ.நா. மனித உரிமைக் குழுவில் எந்தத் தனி நாட்டுக்கு எதிராகவும் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கும், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், ராஜபக்ஷேவிற்கு துணை நின்றது இந்திய அரசு தான். எனவே தான் தனது கூட்டாளிக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்க இந்தியா மறுக்கின்றது. இதற்கு பிரணாப் முகர்ஜி கூறியுள்ள காரணம் ஏற்கத்தக்கது அல்ல.
தனி ஒரு நாட்டின் நிறவெறிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்னாள் பிரதமர் நேரு தயங்கவில்லை. ஆனால் அவர் வழியில் வந்ததாக கூறும் மன்மோகன் சிங் அரசு பொருந்தாத காரணம் கூறி மழுப்புகின்றது. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மேற்கிந்திய நாடுகள் இலங்கைக்கு எதிரானத் தீர்மானத்தை ஆதரிக்கும் போது, இந்தியா பின்வாங்குவது அப்பட்டமான மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கை ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications