இலங்கைக்கு எதிரான ஐ.நா. விவாதத்தில் பசுமைத் தாயகம் பங்கேற்றுள்ளது-டாக்டர் ராமதாஸ்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, ஐ.நா.மனித உரிமை ஆணைய கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதனை ஆதரிப்பது குறித்த அறிவிப்பை குடியரசு தலைவர் உரையில் மத்திய அரசு வெளியிடும் என்று ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் எதிர்பார்த்தது.
ஆனால் குடியரசு தலைவர் உரையில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் வெற்றி பெற செய்வதற்காக தனிப்பட்ட முறையில் நானும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.
என்னால் நிறுவப்பட்ட பசுமை தாயகம் அமைப்பு, ஐ.நா.வின் அதிகாரபூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டு இருப்பதால், மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி லண்டனை தலைமை இடமாக கொண்டு செயல்படும் உலக தமிழர் பேரவையின் செய்தி தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன், அமெரிக்க தமிழ் அரசியல் பேரவையைச் சேர்ந்த மருத்துவர் யசோதா நற்குணம், யேல் சட்டப்பல்கலைக் கழகத்தை சேர்ந்த சட்ட வல்லுநர் தாஷா மனோரஞ்சன்,
தமயந்தி ராஜேந்திரன், இலங்கை மீது அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞர் அலிபைதூன் ஆகியோர் பசுமை தாயகம் சார்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களை சந்தித்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சிக்கு உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் ஆதரவும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சனையில் உலகத் தமிழர்கள் இடையே நிலவும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்திய அரசும் ஆதரிக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications