பிரச்சாரத்திற்கு செல்லும் வைகோவை கண்டாலே ஓடி வந்து சூழந்துகொள்ளும் மாணவர்கள்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. வரும் 16ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கட்சி வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
அவர் வீடு, வீடாகச் சென்று ஆதரவு கேட்கிறார். அப்போது தெருக்களில் நடந்து செல்லும் வைகோவை பார்த்ததும் பள்ளி மாணவர்கள் ஓடி வந்து அவரை சூழந்து கொள்கின்றனர். அவருடன் மகிழ்ச்சியாக உரையாடுகின்றனர். அவரும் மாணவர்களுடன் நெடுநேரம் பேசுகிறார்.
வடக்கு புளியம்பட்டியில் நேற்று மாலை பிரச்சாரம் செய்ய வைகோ சென்றபோது அங்கு மழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து அவர் அங்குள்ள ஒரு வீட்டில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். மழை விட்டபாடில்லை என்பதால் அவர் அதை பொருட்படுத்தாமல் பிரச்சாரத்திற்கு கிளம்பினார். அவர் வந்தது தெரிந்ததும் மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டே அவரை சூழந்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications