ஏர் இந்தியாவுக்கு நஷ்ட ஈடெல்லாம் கொடுக்க முடியாது: போயிங்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஏர் இந்தியா நிறுவனம் ஆர்டர் கொடுத்த போயிங் நிறுவனத்தின் ட்ரீம்லைனர் விமானங்கள் உரிய நேரத்தில் விநியோகிக்கப்படாததால் 500 மில்லியன் டாலர் நட்ட ஈடு கோருவோம் என்ற மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சககத்தின் கோரிக்கையை போயிங் நிறுவனம் நிராகரித்துள்ளது.

ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்து அமைச்சக செயலாளர் பிரசாந்த் சுகுல் கூறியிருந்ததாவது:

கடந்த 2005-ம் ஆண்டு போயிங் நிறுவனத்திடம் 27 டீர்ம்லைனர் விமானங்களுக்காக ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடியான காலத்தில் அந்நிறுவனம் விமானங்களை விநியோகிக்கவில்லை. போயிங் நிறுவனம் தொடர்ந்து தாமதம் செய்து வருவதால் 500 மில்லியன் டாலர் நட்ட ஈடு கோர உள்ளோம். 2008-ம் ஆண்டே விமானங்களை போயிங் நிறுவனம் கொடுத்திருக்க வேண்டும் என்றார்.

ஆனால் போயிங் நிறுவனம் இதனை நிராகரித்திருக்கிறது. 500 மில்லியன் டாலர் நட்ட ஈட்டை இந்திய நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டியதில்லை என்று அதன் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நட்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அமெரிக்காவின் வங்கிதான் போயிங் ட்ரீம்லைனர் விமானங்களை வாங்க கடன் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+