அப்பா வழியில் பிள்ளை?... 'தாதா' ராஜா பையாவை அமைச்சராக்கிய அகிலேஷ்!

பிரபல தாதாவான ராஜ பையாவை அமைச்சராக்கியதன் மூலம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாக அகிலேஷ் கொடுத்திருந்த உறுதிமொழியை அவரே மீறி இருக்கிறார் என்கின்றனர் உ.பி. அரசியல் பிரமுகர்கள்.
அகிலேஷ் ஒரு எம்பியாக இருக்கலாம். ஆனால் மாநில முதல்வராவதற்கு மெச்சூரிட்டி எதுவும் இல்லை என்று சில நாட்களுக்கு முன்புதான் ராஜ பையா விமர்சித்திருந்தார்.
ஆட்கடத்தல், கொலை வழக்கு என்றெல்லாம் குற்றச்செயல்களுக்காக ராஜ பையா மீது பொடா சட்டம் கூட பாய்ந்தது. அப்படியான நபரை அமைச்சராக்கியிருக்கிறார் அகிலேஷ்.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற டி.பி. யாதவ் எம்.எல்.ஏ., குற்றப்பின்னணி கொண்டவர் என்ற காரணத்துக்காக சமாஜ்வாதி கட்சியில் சேர்க்க மறுத்த அதே அகிலேஷ்தான் நாடறிந்த தாதா ராஜ பையாவை சகாவாக்கிக் கொண்டிருக்கிறார்.
சமாஜ்வாதி கட்சிக்கு ஏற்கெனவே கிரிமினல்கள் கட்சி என்று பெயர் உண்டு. இளைஞரான அகிலேஷ் அந்த முகத்தை தூக்கி எறிவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு "ஷாக்" ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார்...
முதல்வராக இருந்த போது ராஜ பையா மீதான பொடா வழக்குகளை ரத்து செய்தவராச்சே முலாயம்சிங்.. அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல்தான் இருக்கிறது....












Click it and Unblock the Notifications