இடைத்தேர்தல் நியாயமாக நடந்தால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்: கருணாநிதி

இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதிரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று சங்கரன்கோவில் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். அதற்காக அவர் சென்னையில் இருந்து நெல்லை புறப்பட்டு சென்றார்.
புறப்படும்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இல்லை என்றால் அது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே திமுக கருதும். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் ஓரவஞ்சமாகவே செயல்படுகிறது. அங்கு தேர்தல் நியாயமாக நடந்தால் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
பிரச்சாரத்திற்காக அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு இன்று காலை நெல்லை சென்றார். அங்கு அவருக்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் இன்று சங்கரன்கோவில் தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார். மேலும் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.












Click it and Unblock the Notifications