கருணாநிதியைக் கண்டித்து கூடங்குளத்தில் கடையடைப்பு போராட்டம்
நெல்லை: அணுமின் நிலையத்திற்கு ஆதரவாகப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி இன்று சங்கரன்கோவிலுக்கு வந்துள்ளார். அவர் வருகையைக் கண்டித்து இன்று கூடங்குளத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று சங்கரன்கோவில் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். இன்று இரவு 7 மணிக்கு வடக்கு ரதவீதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அவர் நெல்லை வந்துள்ளார். இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவித்த கருணாநிதியைக் கண்டித்து கூடங்குளத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கடைத்தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் அவரைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்று அணுஉலை எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராடி வருகையில் அதனை உடனே திறக்க வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications