செஞ்சத எல்லாம் சொல்லிக்காட்டி வாக்கு கேட்கும் ஸ்டாலின்!

இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் முக ஸ்டாலின் சங்கரன்கோவிலில் தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று 3வது நாளாக தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மலையான்குளம் கிராமத்திற்கு சென்ற அவர் பேசியதாவது,
ஏழை, நடுத்தர, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. விவசாயிகளின் துயர் துடைக்க இலவச மின்சாரத் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.
மேலும் நெசவாளர்களுக்கு 500 யூனிட் வரை இலவச மின்சாரம் கொடுத்தோம். விவசாயப் பெருமக்களின் ரூ.7,000 கோடி கடனை ரத்து செய்தோம். எனவே, சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள நெசவாளர்கள், விவசாயிகளின் பிரச்சனை தீர திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications