நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு- நகை கடை உரிமையாளர்கள் 3 நாள் தொடர் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பட்ஜெட்டில் தங்க நகைகள்,வைரம், பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான சுங்கவரி உயர்வு அதிகரிக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் நகைக் கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் 3 நாட்களுக்கு நகைக் கடைகளை நாடு முழுவதும் மூடுவதற்கும் நகைக் கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய சுங்கம் மற்றும் கலால் வரி உயர்வால் ஒரு சவரனுக்கு ரூ800 வரை விலை அதிகரிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரக்கூடிய சூழ்நிலையும் அதிகரிக்கும். இதனால் மத்திய அரசின் வரி உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி 3 நாட்கள் நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டத்தை நகைக் கடை உரிமையாளர்கள் நடத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications