புதுச்சேரி அருகே மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் சிக்கினர்
புதுச்சேரி: இந்திய எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடலோர காவல்படையால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியின் தென்கிழக்குப் பகுதியில் 40 கடல் மைல் தூரத்தில் இந்திய கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து சென்ற கடலோரக் காவல் படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 300 கிலோ எடையுள்ள மீன்களை அவர்கள் பிடித்திருந்ததாகக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட படகுடன், பிடிபட்ட இலங்கை மீனவர்கள் 5 பேரும் புதுச்சேரி மீன்பிடி துறைமுகம் அருகே கொண்டு வரப்பட்டனர். துறைமுகத்துக்குள் அழைத்து வர முடியாதபடி, முகத்துவாரம் பகுதியில் நீர்மட்டம் ஒரு மீட்டருக்குள் குறைந்திருந்தது.
பிடிபட்ட மீனவர்களிடம் கடலோரக் காவல் படை, வருவாய்த்துறை, மீன்வளத்துறை, காவல்துறை உள்ளிட்ட 5 துறை அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை நடத்திய பிறகே, 5 மீனவர்களும் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications