சிறைக்குள் குடுமிபிடி சண்டைபோட்ட ஒசாமின் மனைவிகள்

Subscribe to Oneindia Tamil

Osama bin laden
இஸ்லாமாபாத்: அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசமா பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு 10 மாதங்கள் உருண்டோடிய நிலையில் உயிரோடு உள்ள அவரது மனைவிகள் சிறைக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது அமெரிக்கப்படையினரால் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருடைய 3 மனைவிகளும், 8 குழந்தைகளும் பிடிபட்டனர். இவர்களில் மூத்த மனைவியான சவூதி அரேபியாவைச் சேர்ந்த 61 வயது கைரிஷா சபீர் என்பவர்தான் பின்லேடன் பதுங்கி இருப்பது குறித்து அமெரிக்காவிடம் காட்டி கொடுத்தார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒசாமாவுக்கு மொத்தம் 5 மனைவிகள் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு பின்லேடன் தனது இளைய மனைவி ஏமனைச் சேர்ந்த அமல் அகமத் அப்துல் பதா என்பவருடன் நெருக்கமாக இருந்ததே காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் புலனாய்வுப்பிரிவின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த இந்த 3 மனைவிகளும் சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் அனைவரும் சிறையிலடக்கப்பட்டனர்.

ஆனால் பின்லேடனை காட்டிக் கொடுத்த விவகாரத்தில் மூத்த மனைவியின் மீது இளைய மனைவி ஆத்திரம் அடைந்து சிறைக்குள்ளேயே தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசியதுடன் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் சிறைத்துறை அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+