விமானம் மற்றும் ஹெலிகாப்டர் சேவையில் ஜாய் லுக்காஸ்

இது தொடர்பாக ஜோயாலுக்காசின் நிர்வாக இயக்குனர் ஜோய் ஆலுக்காஸ் கூறியுள்ளதாவது:.
பிரபல நகை விற்பனை நிறுவனமான ஜோயாலுக்காஸ் புதிய முயற்சியாக ஜோய் ஜெட்ஸ்' நிறுவனத்தை தொடங்கி உள்ளது. இந்த நிறுவனம் ஆடம்பர விமானம் மற்றும் ஹெலிகாப்டர் சேவை வழங்கும்.
சொகுசு விமானங்கள்
முதலாவதாக கொச்சியிலிருந்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு விமான சேவை வழங்கும். இதற்காக பெனோம் 100' என்ற அதிநவீன தொழில் நுட்பத்தில் உருவான 5 இருக்கைகள் அமைந்த விமானங்களை பயன்படுத்த உள்ளது. தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் சீனியர் பிசினஸ் எக்சிகிïட்டிவ்கள் மற்றும் ஆடம்பர சுற்றுலா செல்ல விரும்புகிறவர்களுக்கு இந்த விமானங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானங்களையும், சர்வதேச விமான சேவைகளையும் 6 மாத காலத்தில் துவக்க இந்த நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 4 விமானங்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டு உள்ளது.
ஹெலிகாப்டர்
ஜோய் ஜெட்ஸ் நிறுவனம் வழங்கும் ஹெலிகாப்டர் சேவை சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் ஏற்றதாக அமையும். கொச்சியின் அற்புதமான காட்சிகளை வான்வெளியில் இருந்து ரசிப்பதற்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்டு உள்ளது. கொச்சியையும் அதன் இயற்கை காட்சிகள் நிறைந்த சுற்றுப்புறங்களையும் ஒரு மணி நேரத்தில் பறந்து சுற்றிப் பார்க்கலாம்.
மேலும் அவசர காலங்களுக்கும், மருத்துவ உதவி தேவைப்படும் காலங்களுக்கும் மற்றும் சிறப்பு தேவைகளுக்கும் இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஹெலிகாப்டர் 6 இருக்கைகள் கொண்டவை.












Click it and Unblock the Notifications