For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பெண்கள் கைது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் 70 கிலோ எடையுள்ள ரூ.24 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை, ரயிலில் கடத்த முயன்ற மதுரையை சேர்ந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் நிறுத்தப்படும் பிளாட்பாரம் அருகே எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், மாம்பலம் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் 3 பெண்கள் பைகளுடன் சுற்றி திரிந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரிக்க முயன்ற போது, 3 பேரில் ஒரு பெண் தனது பையை கீழே வைத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதனையடுத்து மற்ற 2 பெண்களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மதுரை மாவட்டம் தள்ளாக்குளத்தை சேர்ந்த செல்வி(40), ராணி(37) ஆகியோர் என்பதும், ஊறுகாய் விற்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

அதன்பிறகு 2 பெண்களின் பைகளில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது 2 பைகளிலும் வைக்கப்பட்டிருந்த 70 கிலோ கஞ்சா சிக்கியது. இதன் மதிப்பு ரூ.24 லட்சம் ஆகும். போலீஸ் விசாரணையில் இரு பைகளையும் பல்லாவரம் வரை கொண்டு வந்தால் பணம் தருவதாகவும், தப்பியோடிய பெண் 2 பேரையும் அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து கஞ்சா கடத்த முயன்ற 2 பெண்களையும போலீசார் கைது செய்து, 70 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
2 women from Madurai were arrested in Chennai for smuggling 70kg of ganja. Police start searching one more women in this case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X