திரிவேதி விலகலுக்கு மன்மோகன் வருத்தம்- புதிய ரயில்வே அமைச்சராக முகுல்ராய் நாளை பதவியேற்பு

நாடாளுமன்றத்தில் தினேஷ் திரிவேதியின் ராஜினாமா குறித்து மன்மோகன்சிங் கூறியதாவது:
தினேஷ் திரிவேதி நல்ல ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அமைச்சரவையிலிருந்து அவர் விலகுவது வருத்தம் அளிக்கிறது. அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறேன்.
நாம் கூட்டணி அரசாங்கத்தை நடத்தி வருகிறோம். அனைத்து விவகாரங்களிலும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். ஒருமித்த கருத்து நமக்கு மிகவும் அவசியமானது. மாறுபட்ட கருத்துகளோடு ஒரு கூட்டணி அரசாங்கம் செயல்படுவது என்பது கடினமானது என்றார் அவர்.
மேலும் புதிய ரயில்வே அமைச்சர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
பிரணாப் விளக்கம்
முன்னதாக நாடாளுமன்றத்தில் தினேஷ் திரிவேதியின் ராஜினாமாவை பிரதமர் பரிசீலித்து வருவதாக பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். பிரணாப்பின் விளக்கத்தை பாஜக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் விமர்சித்துள்ளன. அமைச்சரவைக்கு பிரதமர் மற்றுமே பொறுப்பானவர். மற்றொரு நபர் கூறியபடியெல்லாம் அமைச்சரவையை மாற்றியமைக்க முடியாது. அமைச்சரவை மாற்றம் குறித்து நாடாளுமன்றத்தில்
தெரிவிக்க வேண்டும். ஆனால் ஊடகங்களைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்பது பாஜக, இடதுசாரிகளின் கருத்து.
தினேஷ் திரிவேதி
இதே நேரத்தில் அமைச்சரவையில் இருந்து விலக மறுத்து வந்த தினேஷ் திரிவேதிமீது கட்சி ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்றும் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
முகுல்ராய்
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி முன்மொழிந்துள்ள மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முகுல்ராய் ரயில்வே அமைச்சராக இன்று பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால் நாளை காலை 10 மணிக்கு அவர் பொறுப்பேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விலகல் ஏன்?
தினேஷ் திரிவேதி தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. இது அவர் சார்ந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர் உடனே பதவி விலகவும் கட்சி மேலிடம் கட்டளையிட்டது. ஆனால் காங்கிரஸின் ஆதரவுடன் மமதாவை திரிவேதி சமாதானம் செய்ய முயன்றார். இந்த முயற்சி பலனளிக்காத நிலையில் ராஜினாமா செய்தார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications