இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு பிரதமர் ஆதரவு-திமுக உயர் நிலை கூட்டம் கைவிடப்பட்டது
சென்னை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் பேசியதைத் தொடர்ந்து நாளை நடைபெறுவதாக இருந்த திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டமும் கைவிடப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்கான தேவையே இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதியே இன்று அளித்த பேட்டியில் தெரிவித்து விட்டார்.
முன்னதாக நாளை திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. அதில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து இந்திய அரசின் பதில் சாதகமாக இல்லாவிட்டால், அமைச்சரவையிலிருந்து வாபஸ் பெறும் முடிவை எடுக்க திமுக திட்டமிட்டிருந்தது. இதையும் இன்று செய்தியாளர்களிடம் கருணாநிதியே தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று லோக்சபாவில் பிரதமர் மன்மோகன் சிங் வாசித்த ஒரு அறிக்கையில், தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இருந்தாலும் இதை இந்தியா ஆதரிக்கும் என்று புரிந்தும் புரியாமலும் பேசினார் பிரதமர் மன்மோகன் சிங்.
இதையடுத்து இன்று கருணாநிதியை சந்தித்த செய்தியாளர்கள், உயர் நிலைக் கூட்டம் குறித்துக் கேட்டபோது, தற்போது அதற்கான தேவையே இல்லை என்று தெரிவித்தார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications