இலங்கை பிரச்சனை: பிரதமர் அறிவிப்பால் வேலைநிறுத்தம் ரத்து: பழ. நெடுமாறன்
மதுரை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்ததையடுத்து வரும் 23ம் தேதி நடைபெறவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றத் தீர்மானம் முன்மொழியப்படும் நாளான மார்ச் 23ம் தேதி அன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கமும், தமிழக அரசியல் கட்சிகளும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம்.
ஆனால் இந்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அதை நாங்கள் வரவேற்று நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் மார்ச் 23 ம் தேதி அன்று நடத்தவிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுகின்றது.
அதே வேளையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவில் இன அழிப்புப் போர்க் குற்றத்திற்காக ராஜபக்சே அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணைக் குழுவின் நேரடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றத் திருத்தத்துடன் இந்தியா இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்துக் கட்சிகள், தமிழ் அமைப்புகள், வணிகர் சங்கப் பேரவை மற்றும் தொழிற்சங்கங்கள், பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications