கூடங்குளம் விவகாரத்தில் ஜெயலலிதா நம்பிக்கை துரோகம்: ராமதாஸ்

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.
கூடங்குளம் மக்களுக்கு கடைசிவரை துணை நிற்பேன் என்று உறுதியளித்திருந்த ஜெயலலிதா தற்போது அணுமின் நிலையத்தை திறக்க அனுமதி அளித்ததன்மூலம் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் அப்பகுதியில் வாழும் மக்களின் உயிருக்கோ அல்லது வாழ்வாதாரத்துக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு தமிழக அரசு துரோகம் செய்துள்ளது
காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அரசின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது.
மக்களை ஒடுக்குவதாக நினைத்துக் கொண்டு கூடங்குளத்தை நந்திகிராம் மற்றும் சிங்குராக மாற்றிவிடக் கூடாது. கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அணுமின் நிலையத்தை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications