கசாப்பை விடவா நான் மோசமா போய்ட்டேன்.. திரிவேதி குமுறல்!

நேற்று ரயில் பவனுக்குச் சென்ற திரிவேதி ரயில்வே உயர் அதிகாரிகளைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிவேதி,
மும்பையில் தாக்குதல் நடத்தி பல நூறு உயிர்களைக் கொன்று குவித்த பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்க அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
எதற்காக என்னை ராஜினாமா செய்ய சொன்னார்கள் என்பது கடைசி வரை எனக்கு தெரிவிக்கவில்லை. நானும் அதை பற்றி கேட்கவில்லை. மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்ட 10வது நிமிடத்தில் எனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு இ மெயில் செய்து விட்டேன்.
இந்த விவகாரத்தில் நான் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டேன். மற்றவர்களிடம் அந்த கண்ணியத்தை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறி மமதாவுக்கு கண்ணியம் இல்லை என்பதையும் குத்திக்காட்டினார் திரிவேதி.












Click it and Unblock the Notifications