இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!
கொழும்பு: இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பது என்று இந்தியா முடிவு செய்துள்ளதால் அந்நாடு துண்டுதுண்டாக சிதறப் போகிறது என்று இலங்கை தேசிய இயக்க தலைவர் குணதாச அமரசேகரா சாபம் விட்டுள்ளார்.
இது குறித்து இலங்கை தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகரா கூறுகையில்,
ஜெனீவாவில் அமெரிக்கா வெற்றி பெறும் என்றால் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களிக்கும். தோல்வி அடையுமென்றால் ஆதரவாக வாக்களிக்கும். இதுவே இந்தியாவின் சித்தாந்தம். இந்தியா என்றுமே இலங்கைக்கு எதிராகவே செயல்படுகிறது. தமது நலனுக்கே முன்னுரிமை வழங்குகிறது. எனவே அது மேற்கண்ட சித்தாந்தத்தையே இன்று கடைப்பிடித்து வருகிறது.
தமிழ்நாட்டின் நெருக்குதல்களுக்கு இந்திய அரசாங்கம் அடிபணிந்து இலங்கைக்கு எதிரான செயல்பாட்டில் இறங்கியுள்ளது. இது இந்தியாவின் கடைசி காலமாகும். இந்தியாவின் தலைவிதி வரும் 23ம் தேதியோடு மாறிவிடும். இந்தியா துண்டு துண்டாக சிறப்போகின்றது.
தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டை பிரிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா நிச்சயம் முடுக்கிவிடும். இதற்கு தமிழ்நாடும் சாதகமாக இணங்கிச் செயல்படும். இந்த ஆரம்பத்தோடு அந்நாடு துண்டு துண்டாகப் போகும்.
ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டு வரப்படும் தீர்மானம் தோல்வி அடைந்தாலும் இலங்கையை பிரிக்கும் தந்திரத்தை அமெரிக்கா கைவிடாது. வெற்றி பெற்றாலும் இந்தத் தந்திரம் தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications