இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை: மே 17 கோரிக்கை
சென்னை: இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த பன்னாட்டு புலனாய்வு அமைப்பு ஒன்றை நிறுவ வேண்டும் என்று மே – 17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், அந் நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடும் போர் நடைபெற்றது. இந்த போரில் அப்பாவி பொது மக்கள் பலரும் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.மேலும், சர்வசேத மனித உரிமைகளை இலங்கை அரசு காலில் போட்டு மிதித்தது. இந்த நிலையில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த அமெரிக்கா ஐ.நா. சபையி்ல் தீர்மானம் கொண்டுவர உள்ளது.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்து, சுதந்திரமான சர்வதேச அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும், தனி தமிழீழம் அமைப்பது தொடர்பாக, இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், மே 17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை மாபெரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மே 17 இயக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications