கூடங்குளம் விவகாரத்தில் மத்திய அரசுடன் சேர்ந்து தமிழக அரசு நாடகம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

Ramadoss
சென்னை: கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு மத்திய அரசு சேர்ந்து நாடகம் போட்டுள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அங்குள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 250 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா தார்மீக ஆதரவு அளித்ததுடன், கூடங்குளம் பகுதி மக்களின் பயம் போக்கப்படாத வரை அணுஉலைப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று கூறி கடந்த செப்டம்பர் 22ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

ஆனால் அமைச்சரவைக் கூட்ட தீர்மானத்தை மதித்து, அங்குள்ள மக்களின் அச்சத்தைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசாலும், மாநில அரசாலும் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுக்கள், கூடங்குளம் பகுதி மக்களை ஒருமுறை கூட சந்திக்காமல், குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து தயாரித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அணுமின் நிலையத்தை திறக்க கூடாது என்று கூறி வந்த ஜெயலலிதா, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில், அணுஉலைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் எம்.ஆர்.சீனிவாசனை உறுப்பினராக சேர்த்த போதே மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நாடகம் ஆடுகின்றனவோ என்ற எண்ணம் எழுந்தது.

இரு அரசுகளும் இணைந்து நடத்திய நாடகம் தற்போது வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசுடன் பேசி முடித்து அணுமின் நிலையத்தை திறக்க முடிவு செய்த முதல்வர் ஜெயலலிதா, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக இத்தனை நாள் பொறுத்திருந்தார்.

தேர்தல் முடிந்த அடுத்த நாளே கூடங்குளம் அணுமின் நிலைய திறப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காவல்துறையை கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அரசின் இந்த முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது. மக்களை ஒடுக்குவதாக நினைத்துக் கொண்டு கூடங்குளத்தை நந்திகிராம் மற்றும் சிங்கூராக மாற்றிவிடக் கூடாது.

கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அணுமின் நிலையத்தை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அங்கு குவிக்கப்பட்டுள்ள காவல் துறையினரை திரும்ப பெறுவதுடன், கைது செய்யப்பட்ட போராட்டக் குழுவினரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+